நேற்றிரவு இங்குள்ள சிம்பாங் சிம்பாங் பூலாயில் உள்ள குவாரி தளத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மண்வாரி இயந்திரம் அவர்களுக்கு மேல் கவிழ்ந்ததில் இரண்டு வங்காளதேச ஆண்கள் உயிரிழந்தனர்.
இரவு 8.17 மணியளவில் குறித்த விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்தது என்று, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“சம்பவ இடத்திற்கு வந்த சிம்பாங் பூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழுவினர், சிறப்பு உபகரணங்கள் மற்றும் இயந்திர உதவியுடன் பாதிக்கப்பட்ட இருவரையும் அகற்றினர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மீட்பு நடவடிக்கை இரவு 9.55 மணியளவில் முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் கூறுகையில், சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், பலியானவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறினார்.