கோலாலம்பூரிலுள்ள தாமான் புக்கிட் அங்காசா அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 15ல் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவலில், அங்கிருந்த இரண்டு மளிகைக் கடைகள் தீயில் எரிந்து நாசமாகின.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை 6.46 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக, கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், செபுத்தே தீயணைப்பு நிலையம், சுங்கை பேசி தீயணைப்பு நிலையம் மற்றும் ஜாலான் ஹாங் துவா தீயணைப்பு நிலையம் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 33 உறுப்பினர்கள், எட்டு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“அவர்கள் அங்கு வந்தவுடன், சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு மளிகைக் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.