காட்சி நிலையத்தில் வைக்கப்படவிருந்த நான்கு சொகுசு கார்கள் தீயில் எரிந்து நாசம்

தாமான் ஏக்கோ ஆரா டாமான்சாரா அருகே உள்ள வாகன காட்சி நிலையத்தில் வைக்கப்படவிருந்த நான்கு சொகுசு கார்கள், நேற்று நள்ளிரவு தீயில் எரிந்து நாசமானது.

குறித்த சம்பவம் தொடர்பில், நள்ளிரவு 12.30 மணியளவில் தகவல் கிடைத்ததும், பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒன்பது பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு விரைந்து சென்றதாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் மோர்னி மாமட் கூறினார்.

அந்த இடத்திற்கு வந்த உறுப்பினர்கள் அப்போதுதான் லோரியிலிருந்து இறக்கிய கார்களில் தீப்பிடித்ததைக் கண்டதாகவும், “இந்த தீ விபத்தில் ஒரு புதிய BMW X5, இரண்டு பயன்படுத்தப்பட்ட BMW 5 சீரிஸ் மற்றும் BMW 7 சீரிஸ் ஆகியன தீயில் எரிந்து நாசமாயின.

“தீ விபத்து காரணமாக இரண்டு கார்கள் 70 சதவீதம் எரிந்து நாசமானது, மற்ற இரண்டு கார்கள் 100 சதவீதம் எரிந்து நாசமானது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here