4 வாகனங்கள் மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்

புஞ்சாக் ஆலம், 4 வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததால் காரில் சிக்கிய வாகனமோட்டியை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். புதன்கிழமை (ஏப்ரல் 12) காலை 10.08 மணியளவில் ஜாலான் புன்காக் ஆலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் மோர்னி மாமத் தெரிவித்தார்.

நாங்கள் ஒரு தீயணைப்பு இயந்திரத்தையும் ஆறு பேர் கொண்ட குழுவையும் சம்பவ இடத்திற்கு அனுப்பினோம். அவர்கள் காலை 10.20 மணியளவில் வந்தனர். ஒரு பிக்கப் டிரக், மூன்று டன் லோரி மற்றும் இரண்டு கார்கள் என நான்கு வாகனங்கள் விபத்தில் சிக்கியிருப்பதை எங்கள் குழு கண்டறிந்தது  என்று அவர் கூறினார்.

லோரியின் பின்புறம் பிக்கப் ட்ரக் மோதியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். அப்போது டிரக் எதிர் திசையில் பயணித்த இரண்டு கார்களை மோதியது. ஒரு காரின் ஓட்டுநர் வாகனத்தில் சிக்கி கொண்டார். அதே நேரத்தில் 67 வயதான பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அவர் கூறினார். ஓட்டுநர் வாகனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மோர்னி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here