மியன்மாரில் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி

மியன்மாரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இராணுவ ஆட்சிக்கு எதிராக போரடி வரும் மக்கள் மீது அந்த நாட்டு இராணுவம் அடக்குமுறையை கையாண்டு வருவதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், அந்த நாட்டின் சாஜைங் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான அமைப்பினர் தங்கியிருந்தனர். இந்த பகுதி மீது இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

மியன்மார் இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா அமைப்பின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here