முகநூல் வழி அரச நிறுவனத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், பகாங்கின் தெமர்லோவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 42 வயது நபர் இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் தெரிவித்தார்.
இந்த வழக்கை புக்கிட் அமான் சிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு (USJT) தேசத்துரோக சட்டம் 1948 இன் பிரிவு 4(1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் விசாரிக்கிறது என்று அவர் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அரச நிறுவனத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டும் என்று டிசிபி நூர்சியா அறிவுறுத்தினார். அரச நிறுவனத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.