சிகாமாட், தானா மேரா ஆகிய இடங்களில் காற்றின் தரத்தில் மாசுபாடு – சுற்றுச்சூழல் துறை

நேற்று வியாழன் (ஏப்ரல் 13), ஜோகூரின் சிகாமாட் மற்றும் கிளாந்தானின் தானா மேரா ஆகிய இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவீடுகள் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

நேற்று நண்பகல் 2 மணி நிலவரப்படி, சிகாமாட்டில் காற்று மாசுபாடு குறியீடு 139 ஆகவும், தானா மேராவில் 109 ஆகவும் இருந்தது என்று, சுற்றுச்சூழல் இயக்குநர் ஜெனரல் வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபர் கூறினார்.

பொதுவாக காற்றின் தர அளவீட்டில் 0 முதல் 50 வரையிலான API அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 (மிதமானது), 101 முதல் 200 (ஆரோக்கியமற்றது), 201 முதல் 300 (மிகவும் ஆரோக்கியமற்றது), 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை மிகவும் அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு தற்போது பருவமழை மாற்றக் கட்டத்தில் உள்ளது, இது கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி மே நடுப்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, சுற்றுச்சூழல் துறை இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் துறை நாடு முழுவதும் API வாசிப்பின் போக்கை அவ்வப்போது கண்காணிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here