Precinct 2 பாலத்திற்கு பெண் சென்றது தற்கொலைக்காக அல்ல… மன அமைதிக்காகவே

புத்ராஜெயா: Precinct 2இல் உள்ள வவாசன் பாலத்தில் நேற்று பெண் ஒருவர் இருப்பது தற்கொலைக்காக அல்ல, ஆனால் அவரது உணர்வுகளை அமைதிப்படுத்துவதற்காக என்று புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி  அஸ்மாதி அப்துல் அஜீஸ் கூறினார்.

சிவில் உரிமைகோரலில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு சாதகமாக இல்லாததால், 30 வயதுடைய பெண் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மேலும் அவர் ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்றும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

ஏ.அஸ்மதி மேலும் கூறுகையில், காலை 11 மணியளவில் அந்தப் பெண் பாலத்திற்குச் சென்றதாகவும், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அவர் அழுவதைக் கண்டு சமாதானப்படுத்தினர்.

போலீசார் MERS 999 இலிருந்து தகவலைப் பெற்றனர். மேலும் விசாரணைக்காக அந்தப் பெண்ணை Precinct 7 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு உதவ அவரது குடும்பத்தினர் அழைக்கப்பட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் எனவும், ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும், அலட்சியமாக செயற்பட வேண்டாம் எனவும் ஏ.அஸ்மதி அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஒரு பாலத்தில் பெண் அழுவதையும் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருப்பதையும் காட்டும் TikTok வீடியோ வைரலானது. ஆனால் பின்னர் அது நீக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here