வெளிநாட்டு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பான வழக்கு தொடர்பாக அவரது அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனிதவள அமைச்சர் விடுப்பில் செல்ல வேண்டும் என்று சில தரப்பினர் கூறுகிறார்கள், ஆனால் வி.சிவகுமார் சந்தேக நபர் அல்ல, அவர் விடுப்பில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மேலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்தி வரும் விசாரணையை கட்சி தற்போது கவனித்து வருவதாக டிஏபி கட்சியின் செயலாளர் நாயகம் கூறினார்.
எனக்குத் தெரிந்தவரை சிவகுமார் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு தனது ஒத்துழைப்பைக் கொடுக்கிறார் மற்றும் அவர் விடுப்பு எடுக்குமாறு பிரதமரிடமிருந்து எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை” என்று, அவர் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 17) நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.








