கோலாலம்பூர்:
இன்னும் கண்டுபிடிக்கப்படாத நோய்க்கிருமியிலிருந்து வந்துள்ள ” ‘Disease X’ என்று அழைக்கப்படும் புதிய தொற்றுநோய் தொடர்பில், சுகாதார அமைச்சகம் எப்போதும் விழிப்புடன் இருக்கும் என்று அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
மேலும் புதிய நோய் ஏதேனும் ஏற்பட்டால் உலக சுகாதார அமைப்பு அதன் உறுப்பு நாடுகளை எச்சரிக்கும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
“இந்த நோய் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படாததால் இது ‘Disease X’ என்று பெயரிடப்பட்டது மேலும் “ஐக்கிய நாடுகள் சபையில் மற்ற சுகாதார அமைச்சர்களுடனான சமீபத்திய சந்திப்புகளின் போது, நாங்கள் ‘Disease X’பற்றி விவாதிக்கவில்லை ”என்று அவர் இன்று (செப்டம்பர் 25) கோலாலம்பூர் மருத்துவமனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.





















