மலேசியாவில் ஐந்தில் மூவருக்கு வேலை பறிபோகும் அச்சம் உள்ளது- ஆய்வில் தகவல்

நிலை­யற்று காணப்­படும் தற்­போ­தைய பொரு­ளி­யல் சூழ­லால் தங்­க­ளின் வேலை பறி­போய்­வி­டுமோ என்ற அச்­சம் மலே­சி­யா­வில் பல­ரி­டையே இருக்­கிறது. இது குறித்து நடை­பெற்ற கருத்­தாய்வு ஒன்­றில் பங்­கேற்­றோ­ரில் பாதிக்­கும் அதிக­மான மலே­சி­யர்­கள் வேலை பறி­போ­கும் அச்­சம் இருப்­ப­தா­கத் தெரிவித்தனர்.

அதி­கா­ர­பூர்­வ­மாக ஒரு நிறு­வ­னத்­தின் ஊழி­ய­ராக வேலைக்கு எடுக்கப்படுவதையே விரும்­பு­வதாக ஐந்­தில் மூன்று மலேசியர்கள் கூறி­னர். அதற்கு வகை­செய்­யும் ஒப்­பந்­தம் இல்­லாத வேலை வாய்ப்­பு­களை ஏற்றுக்கொள்ளப் போவ­தில்லை என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

ராண்ட்ஸ்­டாட் நிறு­வ­னத்­தின் மலே­சிய கிளையின் இந்­தக் கருத்­தாய்வு எட்டு நாடு­க­ளைச் சேர்ந்த 750 பேரைக் கொண்டு நடத்­தப்­பட்­டது.

நிலை­யற்ற பொரு­ளி­ய­லால் தங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்ற அச்­சம் 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு உள்­ளது. எனி­னும், வேலை பார்க்­கும் நிறுவனங்கள் தங்­க­ளுக்கு உரிய பாது­காப்பை வழங்­கும் என்ற வலு­வான நம்பிக்கை இருப்­ப­தாக 86 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

வேலை நிலைத்­தன்மை, நிலை­யான வரு­மா­னம், ஓய்­வு­காலத் திட்­டம் உள்­ளிட்ட அம்­சங்­களை வேலை தேடு­வோர் அதி­கம் கருத்­தில்­கொள்­வ­தாக கருத்­தாய்­வில் தெரி­ய­வந்­தது.

உல­க­ள­வில் பல வர்த்­த­கங்­கள் மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதோடு, பல நிறு­வ­னங்­கள் ஆட்­கு­றைப்பு செய்­கின்­றன.

இத்தகைய சூழ­லில் வேலை தேடு­வோ­ரும் ஊழி­யர்­களும் வேலை நிலைத்தன்மை, வரு­மா­னம் ஆகிய அம்­சங்­க­ளைப் பற்­றிக் கவலை கொண்டிருப்பதும் தெரி­ய­வந்­துள்­ளது.

கணி­ச­மான சம்­பள உயர்வு இல்லாத வேலைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கருத்­தாய்­வில் பங்­கேற்ற 65 விழுக்­காட்­டி­னர் கூறி­னர். அதே­வே­ளை­யில், வரு­மா­னம் போதா­மல் போன­தால் வேலையை விட­வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாக 38 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here