தென் பீஜி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் பீஜி தீவுகளில் இன்று மதியம் 12.31 மணியளவில் 6.3 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் ஃபீஜியின் லாவுகாலாவில் இருந்து 484 கி.மீ தெற்கே 582 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் அது கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here