மலேசிய கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு வியட்நாமிய மீனவர்கள் கைது

கடந்த சனிக்கிழமை, நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு வியட்நாமிய மீனவர்களை கிளாந்தான் கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களின் படகினையும் பறிமுதல் செய்தனர்.

காலை 10.37 மணியளவில், தோக் பாலி கடற்கரையிலிருந்து 161 கடல் மைல் தொலைவில் குறித்த படகு தடுத்து நிறுத்தப்பட்டதாக கிளாந்தான் கடற்படை இயக்குநர், கடல்சார் கேப்டன், சையத் நோர் அட்லி சையத் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களிடமிருந்து அவர்கள் பயணித்த படகு தவிர, தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்தல் கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக சையத் நோர் அட்லி கூறினார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 13 இலட்சம் ரிங்கிட்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மீன்பிடி சட்டம் 1985 இன் பிரிவு 15(1)(ஏ) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 16 (3) ஆகியவற்றின் கீழ் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக இவ் வழக்கு விசாரிக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here