கோலாலம்பூர்: இந்தோனேசியாவின் வடக்கு மலுகு கடலில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) மாலை 6.21 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தோனேசியாவின் தலாட் தீவில் இருந்து 161 கிமீ தெற்கே 80 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இது மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.