நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, நாட்டின் பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து மெதுவாக உள்ளது என்று மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பத்து மலை திசையில் இருந்து கோம்பாக் டோல் பிளாசாவிற்கு முன் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது, மேலும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று நண்பகல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்லிம் ரிவரில் இருந்து தாப்பா வரை வடக்கு நோக்கிய போக்குவரத்து மெதுவாக இருப்பதாகவும், சிரம்பானில் இருந்து பெடாஸ் லிங்கி மற்றும் சவுத்வில்லே முதல் நீலாய் வரை தென் திசையில் இதே நிலைதான் உள்ளது.
இதற்கிடையில், கூலாயில் இருந்து செடெனாக் வரையிலான போக்குவரத்தும் மெதுவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.