கூச்சிங்கின் மிரியில் உள்ள ஜாலான் புகுட் கார்னரில் இன்று 15 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், ஒரு ஆணுக்கு தொடை மற்றும் முதுகில் தீக்காயம் ஏற்பட்டது, அதேநேரம் ஒரு பெண் வலது காலில் தீக்காயம் அடைந்தார் என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மைய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த சம்பவத்தில் 12 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன, மேலும் இரண்டு வீடுகள் பாதி அழிந்தன, மற்றொன்று சுமார் ஐந்து விழுக்காடு எரிந்துவிட்டது என்று அவர் கூறினார்.
மாலை 6.35 மணியளவில் தீயை அணைக்கும் நடவடிக்கை முற்றாக முடிவடைந்தது, சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.