சுபாங் ஜெயா:
RM1.24 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை சுபாங் ஜெயா சூதாட்டக்காரர்களிடமிருந்து கைப்பற்றப் பட்டவை.
கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் மொத்தம் 179 புலனாய்வு ஆவணங்களில் இருந்து பெறப்பட்டவை, அவற்றில் 160 கைப்பற்றப்பட்ட சூதாட்டப் பொருட்களின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளன என்று சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான் ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் உத்தர விற்கமைய (PTKPN D207) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 406A மற்றும் 407A இன் கீழ் உள்ள சட்டத்தின் விதிகள் மற்றும் பல்வேறு குற்றங்களை அகற்றுவது தொடர்பான முறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றியே இந்தப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு என்றார் அவர்.
இந்த அகற்றல் நடவடிக்கையானது குற்றப் புலனாய்வுப் பிரிவின் (179) புலனாய்வுக் கோப்புகளை உள்ளடக்கியது எனவும் வழக்கறிஞரின் திறமையான நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது, இதன் விளைவாக குற்றவாளிகள் தண்டிக்கப் படுகிறார்கள் என்று அவர் இன்று மாவட்டத் தலைமையகத்தில் கூறினார்.