ரொட்டிகளை ஏற்றிச் சென்ற லோரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி – இருவர் காயம்

ரொட்டிகளை ஏற்றிச் சென்ற லோரி மீது கார் மோதியதில், 22 வயது கார் ஓட்டுநர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 22) காலை 7.15 மணியளவில் மூவார்-தாங்காக் சாலையின் 9ஆவது கிலோமீட்டரில் இல் இந்த சம்பவம் நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தாங்காக் மாவட்ட காவல்துறை தலைவர், முகமட் ஃபாடில் மின்ஹாட் தெரிவித்தார்.

“ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், குறித்த விபத்து காலை 6.45 மணியளவில் நடந்ததாகவும், அப்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் சறுக்கி, லோரி மீது மோதியதாக நம்பப்படுகிறது என்றார்.

“இந்த மோதலின் காரணமாக 22 வயதான கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், மேலும் 18 வயது பயணி காயமடைந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், லோரியின் ஓட்டுநர் லேசான காயங்களுக்கு உள்ளானதால் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பயணி தற்போது மருத்துவமனை மூவார் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக முகமட் ஃபாடில் தெரிவித்தார்.

இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here