மலையேறும் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட 140 கிலோ எடை கொண்ட ஆடவரை 8 தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்டனர்

ஈப்போவில் தனது நண்பருடன் மலை ஏறும் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மஞ்சோங்கில் உள்ள புக்கிட் தீகா ரேடஸ் லாபனில் சிக்கித் தவித்த 140 கிலோ எடையுள்ள ஒருவரை ஸ்ட்ரெச்சரில் கீழே இறக்குவதற்கு எட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் நான்கு மணி நேரம் எடுத்துக்கொண்டனர். 44 வயதான அவர், தனது நண்பருடன் நடைபயணம் மேற்கொண்டபோது தவறி விழுந்து, அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக ஶ்ரீ மஞ்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அந்த நபரின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவரை கீழே இறக்கி முதலுதவி செய்ய தீயணைப்பு வீரர்கள் ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. பின்னர் அவர் ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அறிக்கையின்படி, பிற்பகல் 1.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. மேலும் 11 பேர் கொண்ட குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. காயமடைந்த நபரால் நகர முடியாமல் போனதால் மீட்புக் குழுவினர் 170 மீட்டர் மேல்நோக்கி ஏற வேண்டியிருந்தது, அதே நேரத்தில் காயமடைந்த நபரையும் அவரது நண்பரையும் கீழே இறக்குவதற்கு மீட்புக் குழு சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here