நேற்று பிற்பகல் செனேவில் உள்ள ஜாலான் ஜெராங்காவ்-ஜபோரின் 153 ஆவது கிலோமீட்டரில், இரண்டு புரோத்தோன் பெர்சோனா கார்கள் நேருக்கு நேர் மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறு பேராக உயர்ந்துள்ளது.
அவர்களில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஏனைய இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கெமாமன் மாவட்ட காவல்துறை தலைவர், ஹன்யான் ரமலான் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் முதலாவது காரில் இருந்த நாடியா நடாஷா அபு பக்கர், 23; நூர் சியாஃபினாஸ் நௌரா சைபுல் அஸ்வான், 2 ; துவான் யாஹ் டோல்லாஹ், 61; மற்றும் ரோஸ்லிசா மாட் ஹூசின், 38, ஆகியோர் அடங்குவர்.
அதே நேரம் இரண்டாவது காரில் பயணித்த அப்துல் ஹலிம் இஸ்மாயில், 71, அலிஷா மர்தியா முஹம்மது உபைதில்லா ஜிக்ரி, 2 ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் முதலாவது மற்றும் இரண்டாவது கார்களின் ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் அறுவர் காயமடைந்தனர்”என்று அவர் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.