கினபாலு மலையில் நேற்று ஏறும் போது 45 வயது நபர் ஒருவர் Altitude Mountain Sicknessலால் (AMS) பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அலெக்ஸாண்டர் குயே செக் பூவும் அவரது மனைவியும் நேற்று சிகரத்தை அடைய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சபா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ கிறிஸ்டினா லியூ, ஒரு அறிக்கையில், அந்த ஆடவரும் அவரது மனைவியும் 35, திங்கள்கிழமை ஏறுதலின் ஒரு பகுதியாக, நடுப்பகுதி ஓய்வு நிறுத்தமான பனாலாபனுக்கு வந்ததாகக் கூறினார்.
ஆரம்பத்தில், குயேவின் மனைவி சுமார் இரவு 9 மணியளவில் தலைவலி மற்றும் சுவாசக் கோளாறுகள் பற்றி புகார் செய்தார்.
மவுண்டன் சர்ச் அண்ட் ரெஸ்க்யூ (மொசார்) குழு அவருக்கு முதலுதவிக்காக ஆக்ஸிஜனைக் கொடுத்தது. ஒரு மணி நேரம் கழித்து, மீட்புக் குழுவினர் அவரை Timpohon Gate வரை அழைத்து வந்து மேல் சிகிச்சைக்காக ரானாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, அதிகாலை 2 மணியளவில், கணவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் ரானாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எவ்வாறாயினும், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் Kueh மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அறிகுறிகளின் அடிப்படையில், Altitude Mountain Sickness (AMS) மரணத்திற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது என்று லீவ் கூறினார்.
மனைவியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லியூ தனது இரங்கலை குயேவின் குடும்பத்தினருக்கு தெரிவித்தார். எதிர்காலத்தில் கினபாலு மலை ஏறுபவர்கள்ஏறுவதற்கு முன், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் லியூ அறிவுறுத்தினார்.







