33 ஆண்டுகள் பழமையான பாலர் பள்ளியில் தீ..!

கம்போங் ஜாலான் கெபுன், செக்சன் 30 இல் உள்ள லோரோங் ஹாஜியில் உள்ள 33 ஆண்டுகள் பழமையான பாலர் பள்ளி இன்று 100 விழுக்காடு எரிந்து நாசமானது.

இன்று மதியம் 12.54 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பில், குறித்த பாலர் பள்ளிக்கு அருகில் வசிக்கும் தனது ஊழியர்களால் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக பாஸ்தி ஜாலான் கெபுன் பாலர் பள்ளியின் முகாமையாளர் அஸ்மான் முஹமட் மஹ் ஹுசின் தெரிவித்தார்.

“சம்பவம் நடந்தபோது அவர் போர்ட் கிள்ளானில் இருந்ததாகவும், பாலர் பள்ளி ஊழியரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தவுடன், அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாகவும், ஆனால் அங்கு சென்றபோது அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்திருப்பதைக் கண்டேன், எதையும் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

“அதிர்ஷ்டவசமாக வளாகத்திற்குள் யாரும் இல்லை” என்று அவர் கூறினார்.

குறித்த பாலர் பள்ளியில் 4, 5 மற்றும் 6 வயதுடைய சுமார் 215 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் மோர்னி மாமட் கூறுகையில், மதியம் 12.37 மணிக்கு சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

“ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், குறித்த பாலர் பள்ளி 90.99 விழுக்காடு எரிந்துவிட்டதாகவும், அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் கடை 80 விழுக்காடு தீயில் எரிந்துவிட்டதாகவும் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here