கெடாவில் நடைபெறும் மலேசியா மடானி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் கலந்து சிறப்பிப்பு

இன்று அலார் ஸ்டாரிலுள்ள ராயா ஹோட்டலில் நடைபெறும் மலேசியா மடானி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து சிறப்பித்தார்.

நோன்புப்பெருநாளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்வதற்காக காலை 9 மணி முதல் ஹோட்டல் முகப்பில் இருந்த பொதுமக்களை பாஜூ மலாயு உடை அணிந்திருந்த அன்வர், கைகுலுக்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்வின் போது, துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் கெடாவின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா முகமட் ஹனிபாவும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here