சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூர், அடுத்த வாரம் பித்தப்பைக் கற்களை அகற்றுவதற்கான ஒரு சிறிய சிகிசைக்கு உட்படுத்தப்படுகிறார்.
சபா முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஹாஜிஜி வலியை அனுபவித்து வருவதாகவும் ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
“முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக ஊகங்கள் பரவி வருகின்றன, மேலும் அவர்கள் அனைவரின் அக்கறைக்கும் பிரார்த்தனைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடந்த மாநில அரசின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஹாஜிஜி கலந்துகொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சபாவின் ஆடசியாளர், மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.