கடந்த மார்ச் 25 முதல் இன்று வரை கிளாந்தான் பகுதியில் மொத்தம் 39 பேர் பட்டாசு வெடித்ததில் காயம் அடைந்துள்ளனர்.
கிளந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறுகையில், மொத்தம், 10 பேர் இங்குள்ள ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து பேர் தானா மேராவில் 9 பேரும், குவா மூசாங், தெங்கு அனிஸ், பாசீர் பூத்தே, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனை ஆகியவற்றில் தலா 4 பேரும், கோலக் கிராயில் 3 பேரும், ஜெல்லி மருத்துவமனையி 3 பேரும்; தும்பாட் மருத்துவமனையில் 2 பேரும் ; மச்சாங் மருத்துவமனையில் (2) மற்றும் பாசிர் மாஸ் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்றனர்.
“காயமடைந்தவர்கள் இரண்டு பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் அடிப்படையில், பெரும்பாலானோரின் முகம் மற்றும் கண்கள் உட்பட உடலின் பல பாகங்களில் விரல்கள் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டன என்றார்.
“இந்த மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் துறை தீவிரமாகக் கருதுகிறது, மேலும் பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பட்டாசு வெடிக்காதபடி கண்காணிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.