கம்போங் மலாயு மஜிடியில் வீசிய புயலில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதம்

ஜோகூர் பாருவின் கம்போங் மலாயு மஜிடியில் நேற்று மதியம் வீசிய புயலால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

புயலால் வீடுகளை இழந்தவர்கள் தங்குவதற்கு விரைவில் டேவான்ராயா கம்போங் மலாயு மஜிடியில் நிவாரண மையம் திறக்கப்படும் என்று, லார்கின் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஹைரி மட் ஷா கூறினார்.

“நாங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஒதுக்கீடுகளைப் பெற முயற்சிப்போம். இப்பேரிடர் தொடர்பில் நான் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசியையும் தொடர்பு கொண்டேன், மேலும் அவர் இந்த விஷயத்தைப் பற்றி நேர்மறையான கருத்தைத் தெரிவித்தார், ”என்று அவர் நேற்று இரவு பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here