அலோர் காஜா, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) KM192.6 இல் இரண்டு கார்கள் மோதியதில் 41 வயது தள மேற்பார்வையாளர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை (மே 5) காலை 6.30 மணியளவில் நடந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த கிளந்தான், கோத்த பாருவைச் சேர்ந்த முகமட் செலமட் பெசார் இறந்தவர் என அலோர் காஜா ஓசிபிடி துணைத் தலைவர் அர்ஷத் அபு அடையாளம் காட்டினார்.
இறந்தவர் போர்ட்டிக்சன், நெகிரி செம்பிலானில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார் என்று அவர் கூறினார். அர்ஷாத்தின் கூற்றுப்படி, காயமடைந்த நான்கு பேர் அந்த நேரத்தில் கெந்திங் ஹைலேண்ட்ஸுக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த லிம் பெங் கியோங் 56, டான் லாய் ஃபூங் 54, டான் லாய் சூ 56, மற்றும் பிரெண்டா லிம் ஜி நிங், 28, என அவர் அடையாளம் காட்டினார். மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு கார்களும் ஒரே திசையில் சென்றபோது ஒன்று திடீரென அடுத்த பாதையில் சென்று மற்றொன்றில் மோதியதாக அர்ஷத் கூறினார். சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.