ரொம்பினில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 ஆடவர்கள் பலி

ரொம்பின்:

ஜாலான் குவாந்தான்-ஜோகூர் பாரு சாலையின் 137 ஆவது கிலோமீட்டரில் நேற்று மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இரவு 9.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், நிசான் அல்மேரா காரின் ஓட்டுநர் முகமட் ரஹ்மத் அப் ரஹீம், 34, மற்றும் முஹமட் அமிருல் முக்மினி மாட் டவுட் என்ற 31, வயதான பயணி தலையில் பலத்த காயமடைந்ததன் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.

குவாந்தானில் இருந்து ஜோகூர் பாருவை நோக்கி பயணித்த அவர்களின் வாகனம், சாலையின் வலதுபுறத்தில் உள்ள சந்திப்பில் நுழைய முயன்றபோது, ​​பின்னால் இருந்து நிசான் லோரி மோதியது, இதனால் சிமென்ட் கலவை டிரக் மீது கார் மோதியது, அதன் விளைவாக சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இரண்டு லோரி ஓட்டுநர்களுக்கும் தலையில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் யஹாயா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here