மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இரு பதின்ம வயது வாலிபர்கள் பலி

கோத்தா திங்கி அருகேயுள்ள ஜாலான் ஃபெல்டா ஆயிர் தாவார் 4 என்ற இடத்தில் இரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

நேற்று இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், முஹமட் ஹைகல் சஹ்ரல் (17) மற்றும் முஹமட் இமான் ஃபிர்தௌஸ் நோரிஷாம் (17) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று, கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹுசின் ஜமோரா கூறினார்.

உயிரிழந்த இருவரும் ஒரே மாதிரியான Yamaha Y15 ZR ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர் என்றும், பிரதான சாலையை அடைந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிள்கள் எதிர் திசையில் மோதியது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இரு வாலிபர்களும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது மற்றும் உண்மைச் சம்பவத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here