சாலையோரத்தில் நடந்து சென்ற பெண்ணை கட்டி தழுவிய ஆடவருக்கு 4 நாட்கள் தடுப்புக்காவல்

கடந்த மாதம் சீ பார்க்கில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உதவுவதற்காக நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஃபக்ருதீன் அப்துல் ஹமிட், சந்தேக நபர் அரா டாமன்சாராவில் தடுத்து வைக்கப்பட்டதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 28 அன்று, ஒரு நடைபாதையில் நடந்து கொண்டிருந்த போது ஒரு ஆடவரால் பின்புறமாக கட்டி தழுவியதாக  20 வயதுடைய பெண் ஒருவரிடம் இருந்து போலீசாருக்கு ஒரு புகார் கிடைத்தது.  கருப்பு ஆடை மற்றும் முகமூடி அணிந்திருந்த சந்தேக நபர், பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று ஃபக்ருதீன் மேற்கோள் காட்டினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணியளவில் சந்தேக நபரை போலீசாரால் கைது செய்ய முடிந்தது. வங்சா மாஜு மற்றும் கிளானா ஜெயா ஆகிய இரண்டு வழக்குகளிலும் சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக ஃபக்ருதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here