மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 4 இந்திய நாட்டவர்கள் கைது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற நான்கு இந்திய நாட்டினரை மலேசிய ஆயுதப் படையினர் நேற்று கைது செய்தனர்.

எட்டாவது மலேசிய காலாட்படைப் படையின் (KTJ 8 Bgd) பொறுப்பிலுள்ள பகுதியில், ஆயுதப்படை உறுப்பினர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அனைத்து இந்திய சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டதாக, மலேசிய காலாட்படைப் பிரிவின் (2 பிரிவு) தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அறிவித்தது.

கைது செய்யப்பட்ட 25 முதல் 39 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணிடம் மலேசியாவிற்குள் நுழைவதற்கான செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை என்பது ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டது.

“கைது செய்யப்பட்ட அனைவரும் ல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன,” என்று அவ்வறிக்கையில் அது மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here