பாலிங், உலு பேராக், கிந்தா, மஞ்சோங், முக்கா ஆகிய இடங்களுக்கு முதல் நிலை வெப்பநிலை எச்சரிக்கை

தீபகற்ப மலேசியாவின் நான்கு பகுதிகளுக்கும் சரவாக்கில் ஒரு பகுதிக்கும் முதல் நிலை வெப்பநிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் பதிவான வெப்பமான வானிலை தரவுகளின்படி, தீபகற்ப மலேசியாவின் நான்கு பகுதிகள்- கெடாவில் பாலிங் மற்றும் பேராக்கின் உலு பேராக், கிந்தா மற்றும் மஞ்சாங் ஆகியவற்றையும், சரவாக்கின் முக்காவிற்கும் முதல் நிலை வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று புதன்கிழமை (மே 10) வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், “சபாவில் எந்தப் பகுதியும் இந்த வெப்பநிலை எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

அதிகபட்ச தினசரி வெப்பநிலை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் போது முதல் நிலை வெப்பநிலை எச்சரிக்கை விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here