குவா மூசாங்கில் விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் ஆற்றுப் போக்குவரத்து என அக்கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சுங்கை நெங்கிரி, வெயில் காரணமாக காய்ந்த்துபோவதால் ஆற்றின் கீழ் மண், மணற்பரப்புகள் மற்றும் பாறைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
கடந்த வார தொடக்கத்தில் இருந்து ஆறு வறண்டு வருவதாக அங்குள்ள ஒரு மோட்டார் படகு கேப்டன் முகமட் ஃபக்ரி ஷெரீப், 27, கூறினார்.
மேலும் நீர் மட்டம் குறைவதால் நீர்வழிப்பாதை வழி படகு செலுத்தும்போது ஆபத்தை ஏற்படும், இதனால் அவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைஉள்ளதாகவும், இந்த வார தொடக்கத்தில் இருந்து சுங்கை நெங்கிரியில் இரண்டு மீட்டருக்கு மேல் நீர் மட்டம் குறைந்துவிட்டது என்றார்.
“இந்த வெப்பமான வானிலை நீண்ட காலம் நீடிக்காது என்று நாங்கள் நம்புகிறோம், அவ்வாறு இருந்தால்தான் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தைத் தொடரலாம். இரப்பர் மரம்-தட்டுதல் மற்றும் விவசாயம் தவிர, பல கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த ஆற்றில் மீன்பிடிக்கின்றனர், ”என்று அவர் கூறினார்.
55 வயதான அவுட்போர்டு என்ஜின் படகு கேப்டன், ஷாரி முஸ்தபா கூறுகையில், ஆற்று நீர் வற்றியுள்ளதால் ஏற்படும் அபாயங்கள் காரணமாக சில படகு ஓட்டுநர்கள் தற்போது வேலை செய்வதை நிறுத்திவிட்டனர் என்று கூறினார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக படகுகளை இயக்கும் அனுபவமுள்ள ஷாரியின் கூற்றுப்படி, திறமையான படகு ஓட்டுநர்கள் மட்டுமே தொடர்ந்து சம்பாதிக்க முடியும்.
“சுங்கை நெங்கிரி நீரோட்டத்தின் நுணுக்கங்களை நான் ஏற்கனவே அறிவேன், பெரும்பாலான புதியவர்கள் அல்லது வெளியாட்கள் ஆற்றின் நில அமைப்பில் மணல் திட்டுகள், மரக் கட்டைகள் மற்றும் பெரிய பாறைகள் போன்ற பல சவால்கள் இருப்பதால் படகு சவாரி செய்வதை நிறுத்துவார்கள்,” என்று அவர் கூறினார்.