சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டிய பெண் உயிரிழந்ததையடுத்து ஏற்பட்ட சண்டை: 6 பேர் கைது

ஜார்ஜ் டவுன்: தஞ்சோங் பங்காவில் மே 8 அன்று ஒரு பெண் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததால் ஏற்பட்ட சண்டையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு ஆண்களை போலீசார் கைது செய்தனர். 59 வயதுடைய பெண் பின்னால் வந்த கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகநூலில் வெளியிடப்பட்ட வீடியோ கிளிப்பை பிற்பகல் 2 மணியளவில் போலீசார் அறிந்ததையடுத்து, 28 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆறு பேரும் இன்று கைது செய்யப்பட்டதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சோஃபியன் சாண்டோங் கூறினார்.

இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது என்றார்.விபத்தில் ஈடுபட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேரை நாங்கள் கைது செய்துள்ளோம்  என்று அவர் கூறினார்.

6 பேரும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஊகங்களைத் தவிர்ப்பதற்காக சம்பவத்தின் பதிவுகளைப் பகிர வேண்டாம் என்று சோஃபியன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here