உடல்பேறு குறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் வெளிநாட்டவர் கைது

கோத்தபாரு: மாற்றுத்திறனாளி (PwD) பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் பாகிஸ்தானிய ஆடவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்த புகாரை போலீசார் பெற்றவுடன் 42 வயதுடைய சந்தேக நபர் பெங்கலன் செப்பா தொழிற்பேட்டை பகுதியில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் முகமட் ரோஸ்டி டாட் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 30 வயதான நபர் அதே நாளில் மாலை 5.35 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்ததாக அவர் கூறினார். அந்த அறிக்கையில், புதன்கிழமை மதியம் 1 மணியளவில் ஜாலான் பதங் தெம்பாக்கில் இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

ஒரு உணவுக் கடைக்கு தனியாக நடந்து செல்லும் போது, ஒரு வெளிநாட்டவர் தன்னை அணுகியதாக அவர் கூறினார். சந்தேக நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்பு ஒரு கடைக்கு அழைத்து சென்றார் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். பாதிக்கப்பட்டவர் பின்னர் ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக ரோஸ்டி கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் நேற்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றவியல் சட்டம் பிரிவு 376இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here