நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் பலி; மற்றொரு 11 வயது சிறுவன் தேடப்படுகிறார்

பாசீர் கூடாங்: வெள்ளிக்கிழமை (மே 19) பண்டார் ஶ்ரீ ஆலத்தில் உள்ள ஶ்ரீ இந்தான் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள சுங்கை மாசாயில் 13 வயது நீரில் மூழ்கி உயிரிழந்த வேளையில்  மற்றொரு 11 வயது சிறுவன் காணாமல்  போயிருக்கிறார்.

பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி சர்ஹான் அக்மல் முகமட் சினார் ஹரியனிடம் வெள்ளிக்கிழமை இரவு 11.31 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 13 பேர் கொண்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஸ்குடாய் நீர் மீட்புக் குழுவில் (PPDA) ஆறு பேர் காலை 4.28 மணிக்கு குழந்தைகளைத் தேடி டைவிங் செய்யத் தொடங்கினர்  என்று அவர் சினார் ஹரியனிடம் கூறினார்.

முதலில் பலியான 11 வயது முகமட் டேனிஷ் அஹ்மட்டின் உடல், அவர் ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் சனிக்கிழமை (மே 20) அதிகாலை 5.06 மணியளவில் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். சம்பவ இடத்திலிருந்த மருத்துவ அதிகாரிகள் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர். மேலும் மேல் நடவடிக்கைக்காக உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  என்று சர்ஹான் சனிக்கிழமை கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட மற்றொருவரான 13 வயதான ஜாஹிர் அக்மல் முகமட் இட்ரிஸ் இன்னும் காணவில்லை என்றும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் அவர் சினார் ஹரியனிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here