சட்டவிரோத மியன்மார் நாட்டவர்கள் 8 பேர் கைது

பாசீர் மாஸ்: மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எட்டு நபர்களை, ஒரு பெண் உட்பட, இங்குள்ள கம்போங் குபாங் பிஞ்சாய் என்ற இடத்தில் உள்ள சிறிய செம்பனை  தோட்டத்தில்  போலீசார் கைது செய்தனர்.

பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி காமா அசுரல் மொஹமட் கூறுகையில், 8 பேரும் சரியான ஆவணங்களைத் தரத் தவறியதால், ரகசியத் தகவலைப் பெற்ற பின்னர் போலீசார் செயல்பட்டனர்.

அவர்கள் படகு மூலம் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்டனர் மற்றும் கோலாலம்பூருக்கு அழைத்து செல்லப்படவிருந்தனர்  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார். எட்டு பேரும் இரண்டு வாரங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு குடிநுழைவுச் சட்டம் 1959/63 பிரிவு 51 (3) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here