ஜோகூர் பாரு-மெர்சிங் சாலையில் ஃபெராரி கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில், சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், 34 வயதான யோ தியான் வென் லியோங் மற்றும் 33 வயதான ங் புவே யிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோஸ்மோ செய்தி வெளியிட்டுள்ளது.
வாகனம் மோதி தீப்பிடித்து எரிவதற்கு முன்பு, ஓட்டுநர் அதன் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என நம்பப்படும் இந்த விபத்து குறித்து பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஓட்டுநரும் பயணியும் பலத்த உடல் காயங்களுக்கு உள்ளானதாக கோட்டா திங்கி காவல் நிலையத் தலைவர் யூசோஃப் ஓத்மான் தெரிவித்தார்.









