கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்தை அவர்களுக்கு தெரியாமல் சந்தேகத்திற்கு இடமான முறையில் மாற்றியதால் மொத்தம் RM4.5 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஜோகூர் காவல்துறை அதிகாரி, டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 26 வழக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை இதுபோன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட சைபர் கிரைம்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
இதுபோன்ற குற்றம் நடக்க இரண்டு முக்கிய காரணிகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது, அதாவது ” அமலாக்க நிறுவனங்களின் பணியாளர்கள் என்று கூறி மோசடி செய்பவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்கள் அழைப்புகளைப் பெற்றுள்ளனர்.
“இச்குற்றச் செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், கார்டு சரிபார்ப்புக் குறியீடு அல்லது அட்டை சரிபார்ப்பு மதிப்பு, பயனர்பெயர், கடவுச்சொல் மற்றும் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெறுவதன் மூலம் அவர்களின் ‘உதவி’யை வழங்குவதாகவும் மோசடி செய்பவர்கள் கதைகளை உருவாக்குவார்கள் என அறிய முடிகிறது.
அதே நேரத்தில் “ஆன்லைன் விளம்பரத்தில் விழும் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உட்பட, தவறான கைகளுக்குத் தகவல் வழங்கப்படுவதை அறியாமல், அவர்களின் வங்கிக் கணக்குத் தகவலை வெளியிட்டுவிடுகிறார்கள் ” என்று அவர் விளக்கினார்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்த்த பின்னரோ அல்லது வங்கியிலிருந்து எஸ்எம்எஸ் பெற்ற பின்னர் மட்டுமே தாங்கள் ஏமாற்றப்பட்டதை கவனிப்பார்கள், என்றார்.
“பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட வங்கித் தகவல்களைப் பகிர்வதில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும், எஸ்எம்எஸ் அல்லது ஆப்ஸ் மூலம் கொடுக்கப்பட்ட இணைப்புகள் மூலம் அல்லாமல் சரிபார்க்கப்பட்ட இணையதளத்தில் மட்டுமே ஆன்லைனில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.









