சாலை விபத்தில் பெத்தாய் விற்பனையாளர் மாதவன் மரணம்

நேற்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும் திசையின் 315 ஆவது கிலோமீட்டரில் நடந்த சாலை விபத்தில், ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பெத்தாய் விற்பனையாளர் எஸ்.மாதவன், 37, பலத்த காயங்கள் காரணாமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று, தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் கூறினார்.

விபத்தில் பலியானவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளும், பகாங்கில் உள்ள கேமரன் ஹைலேண்ட்ஸ் என்ற முகவரியைக் கொண்ட ஒரு திருமணமான தம்பதிகள் ஓட்டிச் சென்ற BMW ரக மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.

சம்பவத்தின் போது, அதி சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது, அதாவது அதன் டயர் பஞ்சாரானதன் காரணமாக அது அவசர பாதையில் நிறுத்தப்பட்டது.

“பின்பக்கத்திலிருந்து வந்த பாதிக்கப்பட்டவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளின் வலது பக்கத்தில் மோதியதில், அவர் இடது பாதையில் கீழே விழுந்தார், அதன் பின் பதிவு எண் மற்றும் வகை இன்னும் அறியப்படாத ஒரு வாகனம் மோதியது.

“விபத்தின் விளைவாக, பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் கணவன் மற்றும் மனைவி காயமின்றி தப்பினர் ,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here