கம்போங் டெர்சுசன் சிம்பாங் லிமாவில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் மூதாட்டி ஒருவர் கழுத்தில் கத்திக்குத்துக் காயத்துடன் இறந்து கிடந்தார்.
மாலை 6.45 மணியளவில் அவரது பக்கத்து வீட்டுக்காரர் அவரை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதாக, பேராக் காவல்துறைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் தலையணை, மெத்தை மற்றும் சுவரில் இரத்தக்கறையுடன் அரை நிர்வாணமாக காணப்பட்டது.
மேலும் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் காதுகள், கழுத்து மற்றும் கன்னங்களில் வெட்டுக்காயங்கள் மற்றும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களின் தடயங்கள் கண்டறியப்பட்டன என்றார்.
மேலும்”பாதிக்கப்பட்டவரின் கையில் காயம் உள்ளது, அவர் தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றபோது அவருடன் சண்டையிட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்தது ஜன்னலில் இருந்த அடையாளங்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவத்தின் உண்மையான நோக்கத்தை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அல்லது 05-721222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.









