ஒரு பெண்ணின் படத்துடன் அரபு எழுத்தில் புனித வார்த்தையையும் உடலில் பச்சை குத்திய பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
46 வயதான அப்பெண், நேற்று மே 23 அன்று கோம்பாக்கில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செயலாளர் துணை ஆணையர், டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் தெரிவித்தார்.
குறித்த பெண் தனது உடலில் அரபு மொழியிலான வார்த்தையிடன் பச்சை குத்திய பெண்ணின் படத்தை பேஸ்புக் கணக்கின் ஊடாக பதிவிட்டுள்ளார்.
அவரிடமிருந்து “நாங்கள் ஒரு கைத்தொலைபேசி மற்றும் சிம் கார்டையும் கைப்பற்றினோம்,” என்று அவர் இன்று புதன்கிழமை (மே 24) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117வது பிரிவின் கீழ், சந்தேகநபர் மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நூர்சியா கூறினார்.
“இன ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய மத, இன மற்றும் நிறுவன உணர்வுகளைத் தொடும் எதையும் சமூக ஊடகங்களில் பரப்புவதை அல்லது இடுகையிடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.