மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, இருவர் காயம்

மாராங்கின் கம்போங் படாங் தஞ்சோங்கில் நேற்று பறவைகளைப் பிடிக்கச் சென்றபோது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.

முகமட் ஹசன் முகமட் ரணி, 38, என்பவரே மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது இரண்டு நண்பர்களான முஹமட் ஃபாடிலா ஜூசோ, 37, மற்றும் அப்துல் ஹிஸ்யாம் முஹமட் ஆகியோர் லேசான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று, மாராங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜைன் மாட் ட்ரிஸ் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தமது திணைக்களத்திற்கு இரவு 7 மணியளவில் MERS999 அழைப்பு வந்தது என்றும், இடியுடன் கூடிய மழையின் போது மூவரும் மரத்தின் கீழ் தஞ்சம் அடைந்து கொண்டிருந்தனர், அப்போது  திடீரென மின்னல் தாக்கியதாக நம்பப்படுகிறது” அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோலா திரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here