சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் தீயில் நாசம்

அலோர் ஸ்டார்: ஜாலான் டத்தோ கும்பாரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானது. மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அலோர் ஸ்டார் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 2.07 மணியளவில் பேரிடர் அழைப்பைப் பெற்றதன் பேரில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் புரோட்டான் சாத்ரியா, ஹூண்டாய் கார் மற்றும் BMW கார் ஆகியன எரிந்தன. இந்த சம்பவத்தில் பலியானவர்கள் யாரும் சிக்கவில்லை. தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். முத்தியாரா மற்றும் தானா மேரா தன்னார்வத் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here