புதிய கட்சி தொடங்குகிறாரா கைரி ?

முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின், தற்போதுள்ள எந்த அரசியல் கட்சியிலும் சேராமல், அதற்குப் பதிலாக தானே சொந்தமாக புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு ஆலோசனைசெய்து வருகிறார்.

தான் வேறொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால், அந்தக் கட்சியின் கொள்கைகள் மற்றும் ‘வழக்கங்களை’ பின்பற்ற வேண்டும் அல்லது அவர் அதனை மாற்றியமைக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு பதிலாக தாமே சொந்தமாக புதிய கட்சியை நிறுவினால், அது அதன் சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி நடத்தப்படும் என்று முன்னாள் சுகாதார அமைச்சருமான அவர் கூறினார்.

“கடந்த சில வாரங்களாக, நான் அந்த விருப்பம் தொடர்பில் ஆலோசித்து வருகிறேன், சில மாதங்களுக்கு முன்பு புதிய கட்சியை நிறுவுவது தொடர்பில் நான் கொஞ்சம் தயங்கினேன், ஏனெனில் இந்த நேரத்தில் அரசியல் சந்தையில் பல கட்சிகள் நிறைந்துள்ளதை நான் காண்கிறேன். ஆனாலும் இரண்டாவது வாய்ப்பு வரும்போது, சொந்தமாக கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here