தஞ்சோங் மாலிமில் நீரில் மூழ்கி காணாமல் போன எட்டு வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

தஞ்சோங் மாலிம், சிம்பாங் 4, லுபுக் கெலாப்பில் நீரில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்பட்ட எட்டு வயது சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்.

பாதிக்கப்பட்ட சிறுவன் எட்வர்ட் கிராங் ஜெங்கட் என அடையாளம் காணப்பட்டான் என்றும், சிறுவனது சடலம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) மதியம் 12.35 மணியளவில் டெரடாக் ரிவர் வியூ அருகே கண்டுபிடிக்கப்பட்டது என்றும், பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (நடவடிக்கை) துணை இயக்குநர், சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

சிறுவன் கடைசியாகப் பார்த்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றங்கரைக்கு அருகே, மரக்கிளைகளுக்கு இடையில் சிக்கியிருந்த உடலை தீயணைப்பு துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும், சடலம் அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நோர் அஹ்மட் கூறினார்.

சரவாக்கைச் சேர்ந்த எட்வர்ட் கிராங், ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here