பல ஆண்டுகளாக அம்னோ மீது தாங்கள் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் DAP மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அம்னோ இளைஞர்கள் DAP-யை வலியுறுத்துகின்றனர்.
15வது பொதுத் தேர்தலுக்குப் (GE15) பிறகு DAP முன்பு கபுங்கான் பார்ட்டி சரவாக்கிடம் (GPS) அவ்வாறு மன்னிப்பு கேட்க முடிந்தால், அவர்கள் UMNO விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
“இது உண்மையாக இருந்தால், ஒற்றுமை அரசு நிறுவப்பட்டதற்கு பின்னர் UMNO மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறுமாறு DAP நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சாலே கூறினார்.
“மாநிலத் தேர்தலில் மலாய்க்காரர்களின் மனங்களை குளிரவைக்க வேண்டுமெனில், அவர்கள் அம்னோ மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், என்று DAP தலைமையிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,,” என்று இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTKCL) நடந்த மாநாட்டில் கொள்கை உரையாற்றியபோது கூறினர்.
இதன் மூலம் இஸ்லாமிய விரோத, இனவெறி மற்றும் கம்யூனிசத்தை மையமாகக் கொண்டது என்ற DAP கட்சியைப் பற்றிய குற்றச்சாட்டுகள் தவறானது என்ற எண்ணத்தை மக்களுக்கு DAP நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.