அன்றாட வாழ்க்கையில் இருந்து தப்பிக்க காட்டிற்குள் ஓடிய ஆடவர்

ஈப்போ: மேரு ராயா அருகே காட்டில் ஆறு நாட்கள் தங்கியிருந்து ஒருவர் மீட்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

41 வயதான முகமட் சுஹைரி மொஹமட் தனது அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிக்க கோலாலம்பூரில் இருந்து வந்ததாக திணைக்கள நடவடிக்கை மையத்தின் பொறுப்பதிகாரி முகமட் ரோஜாரி அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) இங்குள்ள அமன்ஜெயா பேருந்து முனையத்திற்கு வந்து, தேசிய தணிக்கைத் துறை கட்டிடம் அருகே உள்ள காட்டுக்குள் சென்றார். அவர் மின்சார துணை நிலையம் வழியாக நுழைந்தார் என்று அவர் சனிக்கிழமை (ஜூன் 10) அறிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் அவசர அழைப்பு எண் மூலம் அந்த நபரிடமிருந்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதிகாலை 2.45 மணியளவில் கட்டிடத்தில் இருந்து சுமார் 3.2 கிலோமீட்டர் தொலைவில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்நபரிடம் கைப்பேசி இருந்தது. ஆனால் இணைய இணைப்பு இல்லாததால் அவரால் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. மீட்கப்பட்ட  அந்த நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here