கிள்ளான் பகுதியில் காரை ஓட்டி வந்த 11 வயது சிறுவன், தந்தை கைது

கிள்ளானில் கார் ஓட்டிச் சென்ற சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அவனையும் அவனது தந்தையையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

49 மற்றும் 11 வயதுடைய தந்தையும் மகனும் இன்று மதியம் 1.15 மணியளவில் இங்குள்ள பாண்டமாரானில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டனர் என்று, தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் சா ஹூங் ஃபோங் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் நடந்ததாக நம்பப்படும் 1.21 நிமிட வீடியோ கிளிப்பில், ஒரு சிறுவன் புரோத்தோன் சாகா காரை ஓட்டிச் செல்லுவது போன்ற காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987, பிரிவு 39(1), ஏபிஜே 1987 இன் பிரிவு 111 மற்றும் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(ஏ) ஆகியவற்றின் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here