சபாவில் 9 ஜூன் 2023 வரை மொத்தம் 4,060 சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

சபாவில் உள்ள மலேசிய குடிநுழைவுத் துறை இந்த ஆண்டு, 9 ஜூன் 2023 வரை மொத்தம் 4,060 சட்டவிரோதக் குடியேறிகளை சபா மாநிலத்தில் உள்ள குடியேற்ற தடுப்பு முகாம்களிலிருந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

அவர்கள் கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மூலம் அனுப்பப்பட்டதாக சபா குடிநுழைவுத் துறை இயக்குனர் டத்தோ, SH சித்தி சாலிஹா ஹபீப் யூசூப் தெரிவித்தார்.

“நேற்று, 52 பிலிப்பைன்ஸ் நாட்டினர், 2023 கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் மூலம், சண்டாக்கான் துறைமுகம் மூலம் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

“சம்பந்தப்பட்ட குடியேற்ற கைதிகள் அனைவரும் MV Antonia 1 படகு மூலம் கடல் வழியாக நாடு கடத்தப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here